உள்ளூர் செய்திகள்
கரூர் நடுப்பாளையம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
- கரூர் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை1-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நடுப்பாளையம், சக்கரபாளையம், கிரசர்மேடு, மவலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கரூர்:
கரூர் மின் வினியோக வட்ட செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
கரூர் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை1-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் மின்வினியோகம் பெறும் குப்பம், நடுப்பாளையம், சக்கரபாளையம்,
கிரசர்மேடு, மவலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது