உள்ளூர் செய்திகள்

காவல்காரன்பட்டியில் நாளை மின்தடை

Published On 2022-09-12 07:20 GMT   |   Update On 2022-09-12 07:20 GMT
  • காவல்காரன்பட்டியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

கரூர்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக குளித்தலை செயற்பொறியாளர் வே.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்காரன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (13-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் காவல்காரன்பட்டி, பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன் காலனி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ராச்சாண்டார் திருமலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர், பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News