உள்ளூர் செய்திகள்

மூதாட்டிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 சிறுவர்களுக்கு சிறை

Published On 2022-07-02 08:30 GMT   |   Update On 2022-07-02 08:30 GMT
  • மூதாட்டிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 சிறுவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.
  • மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார்.

கரூர்:

கரூர் அருகே உள்ள வெங்கமேடு செல்வ நகரை சேர்ந்தவர் மல்லிகா (வயது 70). இவர் அப்பகுதியில் உள்ள சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வெங்கமேட்டை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் சேர்ந்து மல்லிகாவை கத்தியை காட்டி மிரட்டி பணத்ை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News