குலசேகரத்தில் 2 குழந்தைகளுடன் இளம் பெண் மாயம்
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடப்பது வழக்கம்
- குலசேகரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு விசாரனை செய்து வருகிறார்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது (42). இவரது மனைவி ஜெனிகா (31) இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஜெயராஜ் அந்த பகுதியில் பால்வெட்டும் தொழில் செய்து வருகிறார்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடப்பது வழக்கம் கடந்த 3 மாதங்களுக்கு முன் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு நடந்தது. உடனே மகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு தாய்வீட்டில் இருந்தார்.
மகன் தந்தை ஜெயராஜ் பாதுகாப்பில் வளர்ந்து வந்தான். தினமும் காலையில் பள்ளிக்கு வேனில் சென்று விட்டு மாலையில் வருவது வழக்கம். நேற்று காலையில் பள்ளிக்கு சென்ற மகன் மாலையில் வீடு திரும்பவில்லை. உடனே ஜெயராஜ் பள்ளியில் சென்று கேட்டபோது தாய் ஜெனிகா அழைத்து சென்றது தெரிய வந்தது. உடனே ஜெனிகாவின் தாய் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு அவர்களை காணவில்லை
உடனே உறவினர்கள், நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் மகளை காணவில்லை. செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. உடனே குலசேகரம் போலீசில் ஜெயராஜ் தன் மனைவியையும் 2 குழந்தைகளையும் காணவில்லை என்று புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட குலசேகரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு விசாரனை செய்து வருகிறார்.