உள்ளூர் செய்திகள்

புதுக்கடை அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு- கண்ணாடி சேதம்

Published On 2022-07-05 06:38 GMT   |   Update On 2022-07-05 06:38 GMT
  • ராஜின் என்பவர் பஸ்சை போக விடாமல் தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசி உள்ளார்.
  • அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர்

கன்னியாகுமரி :

புதுக்கடை அருகே தேங்காய்பட்டணம் - மார்த்தாண்டம் சாலையில் அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. உதச்சிக் கோட்டை சந்திப்பு பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு, பஸ் திரும்பும் போது, அதே பகுதி அப்பட்டுவிளை என்ற இடத்தை சேர்ந்த ராஜு மகன் ராஜின் (வயது 25) என்பவர் பஸ்சை போக விடாமல் தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசி உள்ளார்.

மேலும் பஸ் மீது கல் வீசி தாக்கியதில் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இது தொடர்பாக பஸ் டிரைவர் நிக்சன் (49) என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.

புதுக்கடை போலீசார் விசாரித்து, அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News