கோட்டாரில் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
- அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு
- கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் கீழதத்தையார்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது28), பெயிண்டர்.
இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று நாகராஜன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் மனைவி குழந்தைகள் இருந்தனர்.
அப்போது நாகராஜன் வீட்டில் இருந்த மனைவியின் சேலையை எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் நாகராஜன் வெளியே வராததால் மனைவி படுக்கையறைக்கு சென்று பார்த்தார். அப்போது நாகராஜன் தூக்கில் தொங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த கணவன் நாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட நாகரா ஜனின் உடல் பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.