உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே கருங்கல் கடத்திய வேன் பறிமுதல் - டிரைவர் கைது

Published On 2022-07-07 07:51 GMT   |   Update On 2022-07-07 07:51 GMT
  • சட்டவிரோதமாக கல் உடைத்து வாகனங்களில் கடத்துவதாக போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது
  • வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரான வன்னியூர் பகுதியை சார்ந்த தர்மராஜ் என்பவரை கைது செய்தனர்

கன்னியாகுமரி :

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கல் உடைத்து வாகனங்களில் கடத்துவதாக போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் திருத்துவபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஒரு வேன் வந்துக்கொண்டிருந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டெம்போவில் எந்த அனுமதியும் இல்லாமல் கல் கடத்துவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரான வன்னியூர் பகுதியை சார்ந்த தர்மராஜ் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News