உள்ளூர் செய்திகள்
குப்பைகள் குவிந்து காணப்படும் அட்டை குளம்
- நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
- விரைவில் அட்டைக்குளம் தூர்வாரப்படும்
கன்னியாகுமரி:
குழித்துறை நகராட்சி கூட்டம் அமைதியான முறையில் நடந்தது. சேர்மன் பொன் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரபீன் ராஜா, ஆணையாளர் ராம திலகம், சுகாதார அதிகாரி ஸ்டாலின் குமார் உட்பட 18 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம் அட்டை குளத்தில் குப்பைகள் குவிக்கப்படுவதாக கவுன்சிலர் தெரிவித்த புகார் அடிப்படையில் அட்டைகுளம் தூர்வாரப்பட இருப்பதாக ஆணையாளர் தெரிவித்தார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விக்கு கலெக்டர் பதில் தெரிவித்துள்ளார். குளம் குளமாகவே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விரைவில் அட்டைக்குளம் தூர்வாரப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.