உள்ளூர் செய்திகள்
மண்டைக்காடு அருகே கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்
- கிறிஸ்டோபர் ஜாண் என்பவரின் வீட்டு நாய், யேசுராஜனை கடிக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது.
- கிறிஸ்டோபர் ஜாண், தன்னை தாக்கியதாக மண்டைக்காடு போலீசில் யேசுராஜன் புகார்
கன்னியாகுமரி :
திங்கள்நகர் அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் யேசுராஜன் (வயது36), கட்டிட தொழி லாளி. இவர் மண்டைக்காடு அருகே காளிவிளையில் வசிக்கும் தங்கையை பார்த்து வர சென்றார். அப்போது கிறிஸ்டோபர் ஜாண் என்பவரின் வீட்டு நாய், யேசுராஜனை கடிக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கு மிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.இதில் கிறிஸ்டோபர் ஜாண், தன்னை தாக்கியதாக மண்டைக்காடு போலீசில் யேசுராஜன் புகார் செய்தார். போலீசார் கிறிஸ்டோபர் ஜாண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.