உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே முன்விரோதத்தால் பக்கத்து வீட்டுக்காரரின் ஆட்டை வெட்டி கொன்றவர் கைது

Published On 2023-07-12 07:19 GMT   |   Update On 2023-07-12 07:19 GMT
  • வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி அங்கிருந்த பிரிட்ஜை வெட்டி சேதப்படுத்தி உள்ளார்.
  • முருகனின் ஆட்டை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு சென்றுள்ளார்.

கன்னியாகுமரி :

இரணியல் அருகே உள்ள செட்டியார்மடம் வலிய விளை காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (வயது 53).

அதேபகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் மகன் அபீஸ்(20). நேற்று மதியம் முருகன் வீட்டில் இருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த அபீஸ், முருகன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி அங்கிருந்த பிரிட்ஜை வெட்டி சேதப்படுத்தி உள்ளார்.

அதனை தட்டிக்கேட்ட முருகனை அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட முருகன் தப்பி ஓடிவிட்டார்.

அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத அபீஸ், வீட்டில் கட்டப்பட்டிருந்த முருகனின் ஆட்டை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு சென்றுள்ளார்.

இது குறித்து முருகன் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அபீஸை கைது செய்தனர்.

Tags:    

Similar News