உள்ளூர் செய்திகள்

திருவட்டார் பெருமாள் கோவிலில் 6-ந்தேதி கும்பாபிஷேகம் - பக்தர்கள் வசதிக்கான பணிகளை செய்ய அதிகாரிகள் குழு ஆய்வு

Published On 2022-06-21 07:21 GMT   |   Update On 2022-06-21 07:21 GMT
  • கோயிலை சுற்றி உள்ள மோசமான சாலைகளை சீரமைக்க வேண்டும்
  • திருவட்டார் பேரூராட்சி சார்பாக கோவில் படித்துறையை ரூ.17 லட்சம் செலவில் சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டது

கன்னியாகுமரி :

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் |கோவில் கும்பாபிஷேக விழா ஜூலை 6-ந்தேதி நடைபெற இருக்கிறது இதையொட்டி கோயிலை சுற்றி உள்ள மோசமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பக்தர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளை உடனே செப்பனிடப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

திருவட்டார் பேரூராட்சி சார்பாக கோவில் படித்துறையை ரூ.17 லட்சம் செலவில் சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள பகுதியில் வண்ணக் கற்கள் பதிக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜய லட்சுமி பொறியாளர் ஷெரிப் முகமது, இளநிலை பொறியாளர் ஜெசி, அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், பொறியாளர் ராஜ்குமார், திருவட்டார் கோவில் மேலாளர் மோகன்குமார் திருவட்டார் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், பேரூ ராட்சி தலைவர் பென்னிலா ரமேஷ், துணைத்தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் சாலை அமைக்கும் வேலை தொடர்பாக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

மேலும் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கார் பார்க்கிங் குடிநீர் வசதி கழிப்பிட வசதி அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள வேண்டியவை பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News