உள்ளூர் செய்திகள்
சாணார்பட்டியில் கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு
- சாணார்பட்டியில் பெட்டி கடை மற்றும் மளிகை கடைகளில் புகையிலை விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
- மேலும் எச்சரிக்கை பெயர் பலகை வைக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜ் உத்தரவுப்படி, வட்டார மருத்துவ அலுவலர் மோகன்ராஜ் அறிவுருத்தலின்படி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலுச்சாமி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சாணார்பட்டியில் பெட்டி கடை மற்றும் மளிகை கடைகளில் புகையிலை விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கடை உரிமையாளர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட் விற்க தடை என பெயர் பலகை வைக்க அறிவுறுத்தினர்.மேலும் எச்சரிக்கை பெயர் பலகை வைக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.