உள்ளூர் செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளது.
- வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
பென்னாகரம்,
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்துள்ளது.
இதனால் நேற்று ஒகேன க்கல்லுக்கு வினாடிக்கு 6,500 கனஅடியாக தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்து றையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.