உள்ளூர் செய்திகள்
மாரண்டஅள்ளி பகுதிகளில் 2 நாட்களுக்கு மின்சாரம் நிறுத்தம்
- மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் மின்மாற்றி தரம் உயர்த்தி மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் 8-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை அதேபோல் 10-ந் தேதி மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மாரண்டஅள்ளி, மல்லாபுரம், பஞ்சப்பள்ளி, கரகூர், கோட்டூர், பொரத்தூர், புலிக்கரை, அல்லியூர், மோட்டூர், பத்தலஅள்ளி, உள்ளிட்ட, பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.