உள்ளூர் செய்திகள்

விற்பனைக்கு அனுப்ப தேங்காய்களை தரம் பிரிக்கும் தொழிலாளிகள். 

அரூர் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி

Published On 2022-07-12 10:12 GMT   |   Update On 2022-07-12 10:12 GMT
  • மொத்தமாக வாங்கி லாரி கணக்கில் தேங்காய் வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
  • விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

அரூர்,

அரூர், பாப்பிரெட்டிப் பட்டி, கடத்தூர், வாணியாறு அணை, வள்ளிமதுரை அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான தென்னை மரங்கள் உள்ளது. இங்கு விளையும் தேங்காய் குஜராத், மகாராஷ்டிரா உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பபட்டு வருகிறது.

இப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகளில் மொத்தமாக வாங்கி லாரி கணக்கில் தேங்காய் வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் தேங்காய் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு காய் விலை ரூ. 5 முதல் ரூ.9 வரை விற்கப்படுகிறது.

Tags:    

Similar News