உள்ளூர் செய்திகள்
- குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
- விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 11 மணிக்கு தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.