உள்ளூர் செய்திகள்

தென்காசியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2022-09-08 09:45 GMT   |   Update On 2022-09-08 09:45 GMT
  • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
  • மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்ற உள்ளனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை ) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.

எனவே அனைத்து வட்டார விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News