உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் அருகே இடிதாக்கி விவசாயி பலி
- விழுப்புரம் அருகே இடிதாக்கி விவசாயி ஒருவர் பலியானார்.
- வயலில் இருந்து மாடுகளை ஓட்டி வந்தபோது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே அண்ணியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 67), விவசாயி. இவர் நேற்று மாலை வயலில் இருந்து மாடுகளை ஓட்டி வந்தபோது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இதுகுறித்து கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.