உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல்

Published On 2022-06-15 09:43 GMT   |   Update On 2022-06-15 09:43 GMT
  • ஆடு விற்ற தகராறில் தாக்குதல்
  • களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலதேவநல்லூர் வேலவன்குடியிருப்பை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 60). விவசாயி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு சொந்தமான ஆடு, மேலதேவநல்லூரை சேர்ந்த ரத்தினபாண்டி வீட்டிற்கு சென்று விட்டது.

ரத்தின பாண்டி அந்த ஆட்டை விற்பனை செய்து விட்டார்.

இதையறிந்த ராம கிருஷ்ணன் அவரிடம் சென்று தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சம்பவ த்தன்று ராமகிருஷ்ணன் மேலதேவநல்லூரில் உள்ள தனது வயலில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ரத்தினபாண்டி மற்றும் அவரது சகோதரர் அவதூறாக பேசி, மண்வெட்டி கனையால் தாக்கினர். கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதில் காயம் அடைந்த ராமகிருஷ்ணன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News