உள்ளூர் செய்திகள்
கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும்: கமிஷனர் ஆபீசுக்கு வந்த இமெயில் மிரட்டல்
- சென்னை கமிஷனர் ஆபீசுக்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
- அதில், கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று இமெயில் வந்துள்ளது. அந்த இமெயிலில் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து கோவையின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணுடன் இசக்கி என்பவர் பெயரில் இந்த இமெயில் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போலி இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இமெயில் மூலம் வந்த பெட்ரோல் குண்டுவீச்சு மிரட்டல் ஒரு வதந்தி என போலீசார் தெரிவித்தனர். மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, கோவை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என கோவை காவல் ஆணையர் தெரிவித்தார்.