உள்ளூர் செய்திகள்
- பெட்ரோல் பங்க் அருகே நடந்து வந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
- இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி நகரம் குமாரசாமி பேட்டை பகுதியை சேர்ந்தவர் சம்மந்தம்(70). இவர் நேற்று மாலை தருமபுரி கிருஷ்ணகிரி சாலையில் நான்கு ரோடு பெட்ரோல் பங்க் அருகே நடந்து வந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
உடலை கைப்பற்றி தருமபுரி நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.