உள்ளூர் செய்திகள்

மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல பெட்டிகளில் தரம் பிரித்து வைக்கபட்டுள்ள தக்காளி பழங்கள்.

வரத்து குறைவால் கடத்தூரில் தக்காளி விலை உயர்வு

Published On 2023-06-02 09:44 GMT   |   Update On 2023-06-02 10:14 GMT
  • ஒரு பாக்ஸ் 400 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்

கடத்தூர், ஜூன்.2-

தருமபுரி மாவட்டம், கடத்தூரை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர் பயிராக தக்காளி பயிர் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு , பாக்ஸ் 100 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அறுவடை கூலி கூட கிடைக்காத நிலையில் கடும் விரக்தியில் விவசாயிகள் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வரை 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் 200 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இன்று வரத்து குறைவால் திடீரென விலை உயர்ந்து 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் 400 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் தக்காளி பயிர் செய்துள்ள விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Similar News