தூத்துக்குடியில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
- கடந்த சில நாட்களாக, கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
- இதனால் மன வேதனை அடைந்த டிரைவர் பெருமாள் நேற்று இரவு வீட்டில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே மேல கூட்டுடன்காடு மேல தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 32). டிரைவர். இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக, கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மாலை அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. இதனால் மன வேதனை அடைந்த டிரைவர் பெருமாள் நேற்று இரவு வீட்டில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.