தருமபுரி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பர்ஸ் திருடிய ஆந்திர வாலிபர் கைது
- பஸ்ஸில் இருந்த வாலிபர் சத்தியவாணி கையில் வைத்திருந்த மணிபர்ஸை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினார்.
- வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தருமபுரி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி அடுத்த அதியமான் கோட்டை அருகே தம்மனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் மனைவி சத்தியவாணி (33).
இவர் கணவருடன் தருமபுரிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பு வதற்காக கடைவீதியில் இருந்து டவுன் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றார்.
அப்போது அவரது கழுத்தில் இருந்த செயின் அருந்ததால் அதை தனது பர்சில் வைத்துக்கொண்டு தம்மனம்பட்டி செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினார்.
பஸ்ஸில் கூட்ட நெரிசல் இருந்தது. அப்போது பஸ்ஸில் இருந்த வாலிபர் சத்தியவாணி கையில் வைத்திருந்த மணிபர்ஸை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போடவே பயணிகள் இறங்கி சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தருமபுரி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சுடு குருமன் பேட் பகுதியைச் சேர்ந்த வினய் குமார் மகன் இம்மானுவேல் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து மணிபர்ஸை மீட்ட போலீசார் அதை சத்தியவாணியிடம் ஒப்படைத்தனர். இம்மானுவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.