தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி
- வியாசர்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
- தாக்குதல் திட்டத்திற்கு பின்னணியாக இருந்து செயல்பட்டவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று வந்தார்.
அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், தமிழக தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டியனை வடசென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் அவர் எதிர்பாராதவிதமாக உயிர் தப்பி உள்ளார்.
இந்த தாக்குதல் திட்டத்திற்கு பின்னணியாக இருந்து செயல்பட்டவர்கள் யார் என்பதை உளவு த்துறை போலீசார் மூலமாக கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இதுபோன்ற சமூக விரோத சக்திகளை தமிழகத்தில் தலை தூக்க விடாமல் தடுத்து இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனி ஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.