உள்ளூர் செய்திகள்
- பிரியதர்ஷினி (வயது 19). கருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- கடந்த மாதம் 30- ந் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு கல்லூரி சென்ற அவர் மறுபடியும் வீடு திரும்பவில்லை.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி கேட், அம்மாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 19). கருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 30- ந் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு கல்லூரி சென்ற அவர் மறுபடியும் வீடு திரும்பவில்லை. திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் அவரை காணவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.