உள்ளூர் செய்திகள்
தென்காசி உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள்
- சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் ராஜா எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.
- விழாவில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவில் உள்ள அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்கள், கலெக்டர் ஆகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
தென்காசி:
தென்காசி உழவர் சந்தையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் ராஜா எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ்,சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுகுழு உறுப்பினர்கள் அன்பழகன் எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., முகம்மது ஷா நவாஷ் எம்.எல்.ஏ., ராஜ்குமார்எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.