உள்ளூர் செய்திகள்

சேரன்மகாதேவியில் பெண் கொலைக்கு காரணம் என்ன?- போலீசார் விசாரணை

Published On 2022-08-25 09:34 GMT   |   Update On 2022-08-25 09:34 GMT
  • சேரன்மகாதேவியை சேர்ந்த மாரியம்மாளை நேற்று இரவு திடீரென ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றார்.
  • கொலையாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

சேரன்மகாதேவி:

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலை. இவரது மனைவி மாரியம்மாள்(வயது 56). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

நேற்று இரவு மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரியம்மாளை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றார்.

இதில் கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ் ராஜன், கோகிலா தலைமை யிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மாரியம்மாள் உடலை மீட்டு சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாரியம்மாளை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மாரியம்மாளின் உறவினர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கும் சமீபத்தில் தகராறு ஏற்பட்டதாகவும், அந்த முன்விரோதத்தில் மாரியம்மாளின் உறவினர்களை பழி தீர்க்க வந்த இடத்தில் அவர்கள் இல்லாததால் மாரியம்மாளை அந்த தொழிலாளி வெட்டிக்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News