உள்ளூர் செய்திகள்

மணலி மண்டலத்தில் குப்பை தரம் பிரிக்கும் போட்டியை சென்னை மேயர் தொடங்கி வைத்தார்

Published On 2022-07-09 10:29 GMT   |   Update On 2022-07-09 10:29 GMT
  • மேயர் பிரியா தனது வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்த தனது புகைப்படங்களை போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
  • “என் குப்பை எனது பொறுப்பு” என்ற இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு சென்னை மேயர் கேட்டுக்கொண்டார்.

திருவொற்றியூர்:

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பை தரம் பிரிக்கும் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சி மணலி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு என் குப்பை எனது பொறுப்பு என்கின்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்கும் சவால் என்ற போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார்.

பின்னர் மேயர் பிரியா தனது வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்த தனது புகைப்படங்களை இந்த போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி வரை ஒரு மாதம் நடைபெறும். இந்த குப்பை தரம் பிரித்து தரும் போட்டியில் பொதுமக்களும் கலந்து கொண்டு வீட்டிலேயே குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என இரண்டு கூடைகளில் பிரித்துக்கொடுத்து அதை படம் பிடித்து பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் வெளியிட்டு 8925800864 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தாலோ அதே எண்ணில் வாட்ஸ் அப்பில் பதிவிட்டாலோ முதல் 3 பேருக்கு டி.வி. வாஷிங்மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும்.

எனவே "என் குப்பை எனது பொறுப்பு" என்ற இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.

இதில் மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், கவுன்சிலர்கள் தீர்த்தி, காசிநாதன், நந்தினி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மணலி மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராஜ் உட்பட அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News