உள்ளூர் செய்திகள்

வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளினார்.

தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழாவின் 12-ம் நாளில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகர் புறப்பாடு

Published On 2023-04-29 09:42 GMT   |   Update On 2023-04-29 09:42 GMT
  • 12-ம் நாளான நேற்று காலை சந்திரசேகரருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.

தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.

விழாவில் தினமும் சுவாமிக்கு அலங்காரம், புறப்பாடு நடந்து வருகிறது.

விழாவின் 12-ம் நாளான நேற்று காலை சந்திரசேகர சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

இன்று காலை சந்திரசேகர சுவாமிக்கு வெண்ணெய்த்தாழி அலங்காரம் செய்யப்பட்டது.

மாலையில் வெள்ளி வானங்களில் விநாயகர், சுப்ரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர், ஓலை சப்பரத்தில் சந்திரசேகரர், அம்பாள் வீதியுலா நடைபெற உள்ளது.

Tags:    

Similar News