உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் அருகே கார்களை விற்று பண மோசடி செய்தவர் மீது வழக்கு

Published On 2022-06-24 07:35 GMT   |   Update On 2022-06-24 07:35 GMT
  • கார் விற்பனையாளர் ரூ. 9 லட்சம் பண மோசடியில் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தாடிக்கொம்பு:

கரூர் மாவட்டம் புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தனது 2 கார்களை விற்பனை செய்வதற்காக திண்டுக்கலைச் சேர்ந்த கார் விற்பனையாளர் வேளாங்கன்னி என்ற பிரபுவை அணுகினார்.

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு 2 கார்களையும் விற்று விட்டு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை பிரபு பெற்றுக் கொண்டார்.

ஆனால் அந்த பணத்தை கருப்பசாமியிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பல முறை பணத்தை கேட்டும் அவர் தராததால் இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் கருப்பசாமி புகார் அளித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பணம் மோசடி செய்த பிரபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News