உள்ளூர் செய்திகள்

திருட்டு நடந்த வீட்டில் பீரோ உடைக்கபட்டிருந்தது.

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

Published On 2023-03-05 09:33 GMT   |   Update On 2023-03-05 09:33 GMT
  • பீரோல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • திருட்டு சம்பவங்கள் குறித்து திருவோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவோணம்:

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள செல்வநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி விவசாயி செல்வராஜ் (வயது 45). இவர் மற்றும் குடும்பத்தினர் நேற்று வயலுக்குச் சென்று விவசாய பணி வேலை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோதுபீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இதே போல் நேற்று மதியம் திருவோணம் மேல மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி சதாசிவம் வீட்டில் பீரோல் உடைக்கப்பட்டு வெள்ளி கொலுசு திருடப்பட்டு இருந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர்.

இரு திருட்டு சம்பவங்கள் குறித்து திருவோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவோணம் பகுதிகளில் பட்ட பகலில் நடந்த இரண்டு திருட்டு சம்பவம் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News