உள்ளூர் செய்திகள்

ஆயுர்வேத மசாஜ் பெயரில் விபசாரம்- 3 அழகிகள் மீட்பு

Published On 2023-02-12 10:24 GMT   |   Update On 2023-02-12 10:24 GMT
  • இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் ஒரு மசாஜ் சென்டருக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
  • வடமாநில இளம்பெண் உள்பட 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

போரூர்:

சாலிகிராமம், அருணாசலம் சாலையில் விபசாரம் நடப்பதாக விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் ஒரு மசாஜ் சென்டருக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அங்கு விபசாரம் நடப்பது தெரிந்தது.

திருச்சியை சேர்ந்த முஸ்தபா என்பவர் அழகிகளை வரவழைத்து ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை கவர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர். மேலும் வடமாநில இளம்பெண் உள்பட 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களை மைலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

குறைந்த கட்டணத்தில் ஆயுர்வேத மசாஜ் என்று ஆன்லைனில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை வரவழைத்து உள்ளனர். பின்னர் அவர்களிடம் அழகிகளை காட்டி நூதனமான முறையில் விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

Tags:    

Similar News