உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி கீதாஜீவன் கலை-அறிவியல் கல்லூரியில் கலைத்திறன் போட்டிகள்

Published On 2023-11-16 09:02 GMT   |   Update On 2023-11-16 09:02 GMT
  • தூத்துக்குடி, குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
  • தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில பேச்சு போட்டி, தமிழ் கட்டுரை போட்டி, ஆங்கில கட்டுரை போட்டி, போஸ்டர் வரைதல், ரங்கோலி கோலம், குழு பாடல்கள் பாடுதல், நாட்டுப்புற பாடல்களுக்கு நடனம் ஆடுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி, குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான கலைதிறன் போட்டிகள் நடைபெற்றது. தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில பேச்சு போட்டி, தமிழ் கட்டுரை போட்டி, ஆங்கில கட்டுரை போட்டி, போஸ்டர் வரைதல், ரங்கோலி கோலம், குழு பாடல்கள் பாடுதல், நாட்டுப்புற பாடல்களுக்கு நடனம் ஆடுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கல்லூரியின் அருகில் உள்ள பள்ளிகளை சேர்ந்த சுமார் 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஓட்டு மொத்த சுழற்கோப்பையை புதியம்புத்தூர் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், 2-ம் பரிசை குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் பெற்றது. கல்லூரி செயளாளர் ஜீவன் ஜேக்கப் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். முன்னதாக கல்லூயின் முதல்வர் இளங்குமரன் வரவேற்றார்.

Tags:    

Similar News