உள்ளூர் செய்திகள்

அகமதாபாத்- திருச்சி சிறப்பு விரைவு ரெயில் பாபநாசத்தில் நின்று செல்லும்

Published On 2022-10-23 06:15 GMT   |   Update On 2022-10-23 06:15 GMT
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.
  • 29, 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் இரவு 11.45 க்கு பாபநாசம் வந்து சேரும்.

பாபநாசம்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து சூரத்-புனே (மும்பை), சென்னை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து சூரத், புனே, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயிலை (வண்டி எண்: 09419/09420) ரெயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது.

இந்த வண்டி இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில் நின்று செல்லும் என்பதையும் அறிவித்துள்ளது.

இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி, 6.11.2022,13.11.2022, 20.11.2022, 27.11.2022 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பாபநாசத்திற்கு காலை 7.25 க்கு வந்து சேரும். பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும்.

மறுமார்க்கத்தில் 29-ந்தேதி, 5.11.2022, 12.11.2022,19.11.2022, 26.11.2022 ஆகிய சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 க்கு பாபநாசம் வந்து சேரும்.

இந்த வண்டியின் மூலம் சென்னை, திருப்பதி (ரெனிகுண்டா), புனே, (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.

சீரடி மற்றும் ராகவேந்திரர் மடம் அமைந்துள்ள மந்திராலயம் செல்லும் பக்தர்களுக்கு இந்த ரெயில் இணைப்பு வண்டியாக இருக்கும்.

தற்சமயம் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ள இந்த வண்டிக்கு கிடைக்கும் பயணிகளின் வரவேற்பைபொறுத்து நிரந்தரமாக்கப்படும்.

எனவே இந்த வாய்ப்பினை அதிகம் பயன்படுத்திக்கொண்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தகவலை திருச்சி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரெயில் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News