உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே விபத்துகார் மோதி வாலிபர் பலி

Published On 2023-01-25 08:28 GMT   |   Update On 2023-01-25 08:28 GMT
  • ெதன்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை.
  • மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள ெதன்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை. அவரது மகன் கார்த்திகேயன் (வயது 23). இவர் நேற்று இரவு தென்னமாதேவியில் இருந்து விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.தென்னமாதேவி டோல்கேட் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திகேயன் தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கார்த்திகேயன் இறந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குபதிந்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News