உள்ளூர் செய்திகள்

ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

Published On 2022-06-26 08:42 GMT   |   Update On 2022-06-26 08:42 GMT
  • ஒகேனக்கல் ஆற்றில் குளித்த வாலிபர் மூழ்கி உயிரிழந்தார் .
  • இவர் கடலூர் மாவட்டத்திலிருந்து சுற்றுலா வந்தவர்.

பென்னாகரம்,

கடலூர் மாவட்டம் தொண்டமானத்தம் அடுத்த எஸ்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சந்தோஷ் வயது 34 இவர் அவரது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நித்தியா என்ற மனைவியும் அஜய் என்ற 7 வயது மகனும் உள்ளனர் அவரது மனைவி நித்யா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேருடன் இன்று ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர் சுற்றுலா வந்தவர்கள் முதலைப் பண்ணை மற்றும் தொங்குபாலம் ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்த பின்பு ஆலாம்பாடி பகுதியில் குளித்துள்ளனர். சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது சந்தோஷ் நீச்சல் தெரியாமல் ஆழமான இடத்துக்குச் சென்று சுழலில் சிக்கி தத்தளித்து உள்ளார் இதனைக் கண்ட நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் மூழ்கிவிட்டார் அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு சுமார் அரை மணி நேரம் தேடுதலுக்கு பின்பு சந்தோஷ் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Similar News