தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீர் மாயம்
- சென்னை மாதவரத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவரை காளீஸ்வரி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக காளீஸ்வரி தூத்துக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையா புரம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தெர்மல் அனல்மின்நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு காளீஸ்வரி (வயது 21) என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் சென்னை மாதவரத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவரை காளீஸ்வரி காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் அவர் கணவருடன் சென்னையில் வசித்து வந்தார்.
கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கணவரை பிரிந்து காளீஸ்வரி தூத்துக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி வீட்டில் இருந்த காளீஸ்வரி திடீரென மாயமானார். அக்கம், பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் காளியம்மாள் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளீஸ்வரி எங்கு சென்றார்? யாரும் கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.