உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Published On 2022-09-21 10:06 GMT   |   Update On 2022-09-21 10:06 GMT
  • கல்யாணஓடை கிராமத்தில் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
  • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அக்பர் அலி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தஞ்சாவூர்:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் அக்பர்அலி (வயது 46 ).

இவர் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பகுதியில் இருக்கும் தனது சித்தப்பா வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

மதுக்கூர் அருகே கல்யாணஓடை கிராமத்தில் மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட அக்பர்அலி பலத்த காயமடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அக்பர்அலி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அக்பர்அலியின் சகோதரர் ஹமருல் ஜமால் மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News