உள்ளூர் செய்திகள்
திண்டிவனத்தில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு சொகுசு பஸ்
- சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு அரசு விரைவு குளிர்சாதன பஸ் 60 பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டு சென்றது.
- மதுரைக்குச் சென்ற குழந்தையுடன் பெண் உட்பட பயணிகள் நடு–ரோட்டில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நின்றனர்.
விழுப்புரம்:
சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு அரசு விரைவு குளிர்சாதன பஸ் 60 பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதி யில் சுமார் 12 மணி அள வில் திடீரென ஏசி பழுதானதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்ற குழந்தையுடன் பெண் உட்பட பயணிகள் நடுரோட்டில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நின்றனர். திண்டிவனத்தில் உள்ள பணி மனையில் இருந்து பஸ்சை பழுது நீக்கி அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு சென்றது.