உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆண்டிபட்டியில் போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது

Published On 2022-09-07 06:03 GMT   |   Update On 2022-09-07 06:03 GMT
  • தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள், போதை மருந்துகள் விற்கப்பட்டு வருகின்றன.
  • தடைசெய்யப்பட்ட போதை மாத்திரை வாங்கி பயன்படுத்தியதும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள், போதை மருந்துகள் விற்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னமனூரில் போதை மருந்து, ஊசி விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த திருச்சியை சேர்ந்த வியாபாரி மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த உதவியாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதனைதொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஆண்டிபட்டி சீனிவாசாநகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு கும்பல் சுற்றித்திரிந்தனர்.

போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் மதுரையில் இருந்து தடைசெய்யப்பட்ட போதை மாத்திரை வாங்கி பயன்படுத்தியதும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட தினேஷ்(23), சந்தானமுத்து(25), வைரம்(28), கார்த்திகேயன்(22), நம்பிராஜ்(20) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News