உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யபட்ட குட்கா மூட்டைகளை படத்தில் காணலாம்.

450 கிலோ குட்கா மூட்டைகள் பறிமுதல்

Published On 2023-06-17 09:06 GMT   |   Update On 2023-06-17 09:06 GMT
  • தர்மபுரி எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 100 மூட்டைகளில் ரூ.3.23 லட்சம் மதிப்புடைய போதை பொருட்களை கடத்தி சென்றனர்.

காரிமங்கலம்,

கர்நாடகா மாநிலம் பெங்களுருவிலிருந்து, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்கு குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்துவதாக தர்மபுரி எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அகரம் பிரிவு சாலை, மொரப்பூர் பிரிவு சாலை, கும்பாரஅள்ளி சோதனை சாவடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

சந்தேகத்தின் பேரில் பெங்களூரில் இருந்து வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி செல்வது தெரியவநதது.

இதில் 100 மூட்டைகளில் ரூ.3.23 லட்சம் மதிப்புடைய போதை பொருட்களையும், சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  

Tags:    

Similar News