உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பழனி அருகே வழிப்பறி செய்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-10-15 03:59 GMT   |   Update On 2022-10-15 03:59 GMT
  • பழனி அருகே ரூ.3 லட்சத்தை 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்தனர்.
  • எஸ்.பி பரிந்துரையின் பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

பழனி:

பழனி அருகே மானூர் பகுதியில் சக்திவேல் என்பவர் பைக்கில் சென்றார். அப்போது அவரை வழிமறித்து முத்துப்பாண்டி, ராகுல், மாரியப்பன், மகாராஜா ஆகிய 4 பேர் ரூ.3 லட்சத்தை வழிப்பறி செய்தனர்.

இவர்கள் மீது வழக்குபதிவு செய்து கீரனூர் போலீசார் கைது செய்தனர். தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News