உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

Published On 2022-06-17 05:22 GMT   |   Update On 2022-06-17 05:22 GMT
  • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது
  • லாட்டரி சீட்டு விற்பனை

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு கிடைத்த தகவலின் படி எஸ். பி தனிப்படை போலீசார் நிலக்கோட்டை பூ மார்க்கெட் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நிலக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராஜ் (40), பூசை கருப்பு (35), பெருமாள் (60), ராஜா (40) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 900 லாட்டரி சீட்டுகள், ரூ.28,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News