உள்ளூர் செய்திகள்
.

ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

Published On 2022-06-03 10:03 GMT   |   Update On 2022-06-03 10:03 GMT
பாலக்கோடு மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
பாலக்கோடு, 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாதம் பட்டியில் இயங்கிவரும் ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி  இறுதியாண்டில் பயிலும் மாணவ ,மாணவிகளுக்கு. சென்னையில் இயங்கி வரும் பிரபலமான ராயல் என்பீல்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் கல்லூரியில் நடைபெற்றது.  

இம்முகாமில் லக்ஷ்மி சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பாக பொருளாளர் ராஜா கவுண்டர் முன்னிலை வகித்தார்.  கல்லூரியின் முதல்வர் கந்தசாமி விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று பேசும்போது, டிப்ளமோ படித்த மாணவர்கள் தங்கள் தனித்திறமையை மேம்படுத்திக்கொண்டு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இவ்விழாவில் அறக்கட்டளை செயல் இயக்குனர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். 

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அலுவலர் பார்த்திபன் தங்கள்  நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து அங்கு பணிபுரிவோருக்கு விளக்கினார். வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. 

இறுதியாக 42 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார்.
Tags:    

Similar News