உள்ளூர் செய்திகள்
மரணம்

மதுரையில் கல்குவாரியில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் மரணம்

Published On 2022-06-02 04:51 GMT   |   Update On 2022-06-02 04:51 GMT
இறந்த மகனின் உடலை கண்டு தர்மராஜ் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
மதுரை:

மதுரை கடச்சனேந்தல் காட்டு நாயக்கன் தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகன் அன்பரசன் (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை அன்பரசன் தனது நண்பர்கள் சிலருடன் யானை மலை அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால், கரை ஓரமாக நின்று குளித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அன்பரசன் எதிர்பாராதவிதமாக தண்ணீருக்குள் விழுந்து மூச்சுத்திணறியபடி மூழ்கினார். அங்கிருந்த சிலர் உடனடியாக தண்ணீருக்குள் குதித்து சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால் அன்பரசனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து தல்லாகுளம் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் நீச்சல் வீரர்கள், யானை மலை குவாரி குட்டையில் குதித்து சிறுவனை தேடினர்.

அதற்குள் வெளிச்சம் குறைந்ததால் விளக்கு ஒளியை பயன்படுத்தி தேடும் பணியை தொடர்ந்தனர். பல மணிநேரம் போராட்டத்துக்கு பின் குவாரி குட்டையில் அன்பரசனின் உடல் மீட்கப்பட்டது.

இறந்த மகனின் உடலை கண்டு தர்மராஜ் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News