உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்- குழந்தை திருமணம் செய்து வைத்த சகோதரி மீது வழக்கு பதிவு

Published On 2022-06-01 08:42 GMT   |   Update On 2022-06-01 08:42 GMT
ஜோலார்பேட்டை அருகே 17 வயது சிறுமியை குழந்தைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மற்றும் அவரது சகோதரி மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமியை சின்ன மோட்டூர் பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் ராஜீவ் என்பவர் கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சிறுமி தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இதனால் திருப்பூர் பகுதியில் உள்ள ராஜீவ் சகோதரி ராஜேஸ்வரி அவரது வீட்டில் கடந்த 26-ந்தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் தந்தை நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகளை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீதும் குழந்தை திருமணம் செய்து வைத்த அவரது சகோதரி ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அக்காள், தம்பியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News