உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வள்ளியூர் அருகே சமையல் செய்தபோது தீப்பிடித்து மூதாட்டி பலி

Published On 2022-05-30 10:16 GMT   |   Update On 2022-05-30 10:16 GMT
வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளத்தில் சமையல் செய்தபோது தீப்பிடித்து மூதாட்டி பலியானார்.
நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளம் மீன்கடை தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி மேரி(வயது 80). பெரியசாமி இறந்துவிட்டதால் மேரி தனியாக வசித்து வந்தார். 

சம்பவத்தன்று இரவு சமையல் செய்வற்காக ஸ்டவ் அடுப்பை பற்றவைத்தபோது எதிர்பாராதவிதமாக மேரி மீது தீப்பற்றியது.

இதில் உடல் கருகிய நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News