உள்ளூர் செய்திகள்
முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

Published On 2022-05-29 09:48 GMT   |   Update On 2022-05-29 09:48 GMT
திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி டிடிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி கால்பந்து போட்டி  நேற்றும், இன்றும் ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மின்னொளி போட்டியை மாரிமுத்து எம்எல்ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டி தொகுதி கவிதா பாண்டியன் நகர தலைவர் திருத்துறைப்பூண்டி துரைராயப்பன் ராய் டிரஸ்ட், பாஸ்கர் ஒன்றியக்குழு தலைவர், ஜேசிஐ எடையூர் ஆர்வி.மணிமாறன் நிறுவனர் பாரதமாதா தொண்டு நிறுவனம், மனோகரன் நெல்மணி திருத்துறைப்பூண்டி, எம்எஸ்.தர்மலிங்கம் கிருஷ்ணா ஜவுளி, சிஎஸ் சிவக்குமார் வழக்கறிஞர்போட்டியை முன்னிலை வகித்தனர்.

இதில் டிஎஸ்பி சோமசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் அகடமி தலைவர் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர். ஆசைத்தம்பி நூலகர் நன்றி கூறினார்.
Tags:    

Similar News