உள்ளூர் செய்திகள்
கைதான ஆனந்த்.

பாவூர்சத்திரம் அருகே திருட்டு வழக்கில் பெயிண்டர் கைது

Published On 2022-05-29 09:43 GMT   |   Update On 2022-05-29 09:43 GMT
பாவூர்சத்திரம் அருகே திருட்டு வழக்கில் பெயிண்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வீ. கே.புதூர்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை  நடத்தி வந்தனர். 

மேலும் சி.சி.டி.வி. காட்சிகளின்  உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது மடத்தூர் சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த தவளை என்கிற ஆனந்த் (வயது 22) என்பது தெரிய வந்தது.

போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில்  அவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் இருந்து திருடிய பணம் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருட்டு வழக்கில் ஈடுபட்ட ஆனந்த் பெயிண்டர் மற்றும் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார்.
Tags:    

Similar News